இப்போது வழக்கறிஞராய் இருக்கும் என் மகள் செந்தூரி சிறுமியாய் இருந்தபோது அவளுக்காக நியூ செஞ்சுரியில் வாங்கிய சோவியத் யூனியனின் பெருமைக்குரிய ராதுகா பதிப்பக நூல் ஒன்றில் (அனிமல் புக் - என்று நினைவு) கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்த இந்த வரிகளை இப்போதும் மறக்கமுடியவில்லை. அந்த வரிகள் ஓநாய்களுக்கு மட்டுமே அல்ல.... கொலைகார ராஜபட்சேக்களுக்கும் அவர்களது இந்தியத் தோழர்களுக்கும் கூட அச்சு அசலாக அப்படியே பொருந்துகின்றன. 10 மாதங்களுக்கு முன் ராஜபட்சேக்களிடமிருந்து நமது சொந்தங்களைக் காப்பாற்றமுடியாத நிலை. இன்று, திருப்பதி வெங்கடேசப் பெருமாளால் கூட ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாத நிலை. 2008 அக்டோபரிலிருந்து தமிழினத்தை அழித்தொழிக்கும் பணியில் இறங்கியது இலங்கை.
ஒட்டுமொத்தத் தமிழினமும் அஞ்சி நடுங்கியது. அச்சத்தில் ஒடுங்கியது. பதுங்குகுழியில் பதுங்கியது. 26 மைலில் நடந்த இந்த அநீதி கண்டு தாய்த் தமிழகம் துடித்தது, ஆர்ப்பரித்தது. எங்கள் சகோதரர்களைக் கொல்லாதே என்று குரல் கொடுத்தது. உயிர்ப்பிச்சை கேட்டது. இப்போது, ராஜபட்சேக்களின் முறை. தோட்டக்காரன் துப்பாக்கியை எடுப்பதைப்போல், சர்வதேசமும் போர்க் குற்றம் என்று ஒரே குரலில் பேசுகிறது. தடை போடுவோம் என்கிறது ஐரோப்பா. விசாரிப்பேன் என்கிறது அமெரிக்கா. அஞ்சி நடுங்கி பதுங்கப் பார்க்கிறார்கள், ராஜபட்சேக்கள். இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் விரிக்கப்படும் வலையிலிருந்து ராஜபட்சே தப்பிக்கவே முடியாது. ஆயிரம் ஆயிரமாய் நமது சகோதரர்கள் கொல்லப்பட்டபோது, நாம் துடித்தோம்.
இன்று தன்னுடைய கொடிய சகோதரன் கோதபாய ராஜபட்சே கழுத்துக்கு நேராக கத்தி இறங்குவதைப் பார்த்து, கழுத்தறுபட்ட கோழி மாதிரி அலறித் துடிப்பது, மகிந்த ராஜபட்சே. இன்னும் சொல்லப்போனால், கோதபாயவுக்குப் பிறகு அந்தக் கத்தி யார் கழுத்தில் இறங்கும் என்பது தெரியும் மகிந்தவுக்கு. அதனால்தான் கோழி கொஞ்சம் கூடுதலாய்த் துடிக்கிறது. தானாடாவிட்டாலும் தன் சதையாடுகிறது. இங்கோ, மானாடா விட்டாலும் மயிலாடியது. அதைத் தவிர வே
ஒளிதீபமேற்றும் உன்னத நாள்;
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னத நாள்;
நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்.
ஆனால் இந்த வருடம், தேசியத்தலைவரின் உரையில் என்ன விடயம் இருக்கும் என்பதைவிட தேசியத்தலைவர் அதி மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவாரா???.. இல்லையா??? என்ற கேள்வியுடன்கூடிய எதிர்பார்ப்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவங்களின் பிற்பாடு, தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான,தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அன்றைய சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்களால்கூட எதையுமே உறுதியாகக் கூற முடியாதளவுக்கு இப்பொழுதும் அவ்விடயம் மர்மமாகவே தொடர்கின்றது.
இந்த நிலையிலேயே,
இம்முறை தலைவர் அவர்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர்தின உரை நிகழ்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. தமது மான்புமிகு தலைவரின் மீள்வரவுக்காக... அவர் "மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுபவையேயன்றி உறுதியாகக் கூற முடியாதவை. அந்தவகையில், எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் உரை நிகழ்த்தப்படுமா என்பதும் உறுதியாகக் கூறமுடியாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.
இப்படிக்கு தமிழன்
கயவனின் கந்தக மழையில் கருகிய எம்முறவுகளின் கறிவாடை தமிழகக்கறையோரம் வீச அதனை மாற்ற இங்குள்ள தமிழன் தீபாவளி எனும் பெயரில் வெடிவெடித்து கந்தக வாசம் பரப்புகிறான் ஆரியப்பாப்பனன் சூழ்ச்சியால் உன் தலைவன் இராவணைக்கொன்றான் கொண்டாடினாய் அதனால்தான் பாப்பனன் இன்று உன் இனத்தையே அழித்தான் கொண்டாடுவாய் என்று கொண்டாடு நாளை உன்னைஅழிக்க காத்திருக்கிறான். காத்திருப்பது தெரியாமல் டம் டம் என்று வெடித்து அந்த ஒலியை ரசி மடார் மடார் என அவன் உந்தலையில் போட்டு உன் மரண ஓலத்தை அவன் ரசிப்பான்.... இப்படிக்கு தமிழன்